search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் மீது புகார்"

    • கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை.
    • தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பொடாரங்கொட்டய் பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவி. தருமபுரி பகுதியில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி.காம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி தனது தந்தையுடன் சேர்ந்து விவசாய நிலத்தில் பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி வந்துள்ளார்.

    அன்று மாலை சுமார் 4 மணிக்கு கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து மாணவியின் தந்தை தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் நாகர்கூடல் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (26) என்பவர் கடத்திச் சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வீட்டை விட்டு சென்ற கிரேசி அதன்பிறகு வீடு திரும்பவில்லை.
    • பல்வேறு இடங்களில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே உள்ள நாசன்கால் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மாது. இவரது மகள் கிரேசி (வயது 19).

    இவர் தருமபுரியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். கடந்த 15-ந்தேதி வீட்டை விட்டு சென்ற கிரேசி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் காவேரிப்பட்டினம் போலீசில் மாது கொடுத்த புகாரின் பேரில் தனது மகளை தருமபுரி அருகேயுள்ள எட்டியானூரை சேர்ந்த ஜெயராமன் என்ற வாலிபர் கடத்தியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    ×